Saturday 27th of April 2024 07:51:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா!

பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா!


யாழ்.போதனா வைத்தியசாலை பரிசோதனைக் கூடத்தில் இன்று 336 மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலவரம் தொடர்பில் எமக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய முடிவுகளில் தொற்று உறுதியானவர் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்தவர் என்றும் தன்னுடைய மாமியாரின் மருத்துவத் தேவைக்காக கொழும்பு சென்று திரும்பியவரே அடையாளம் காணப்பட்டதாகவம் அவர் தெரிவித்தார்.

குறித்த நபர் 14 நாட்கள் தனிமையில் இருந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிறைவடையும் நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE